search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புத்தன் அணை"

    • போக்குவரத்து நெருக்கடியை சரி செய்ய நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம்.
    • 65 இடங்களில் மாநகர பகுதியில் நோ பார்க்கிங் போர்டு வைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் மாநக ராட்சியில் வியாழக்கிழமை தோறும் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு வருகிறது. குறிப்பாக வீட்டு வரி தொடர்பாக அதிக அளவு மனுக்கள் வந்திருந்தது. அந்த மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க மேயர் மகேஷ் உத்தர விட்டார்.

    இதைத்தொடர்ந்து அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் போக்குவரத்து நெருக்கடியை சரி செய்ய நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம். ஏற்கனவே ஒரு சில சாலைகள் இரு வழிப்பாதையாக மாற்றப்பட்டுள்ளது. மேலும் வடசேரியில் இருந்து மணிமேடை வரை உள்ள சாலையை இருவழிப்பாதையாக மாற்றுவது தொடர்பாக ஆலோசனை நடத்தி வருகிறோம்.

    அதற்கான அளவீடு பணி நடந்து வருகிறது. போக்குவரத்து போலீசார் நோ பார்க்கிங் போர்டு வைப்பது தொடர்பாக ஆலோசனை மேற்கொண்டனர். 65 இடங்களில் மாநகர பகுதியில் நோ பார்க்கிங் போர்டு வைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அதற்கான போர்டு மாநகராட்சி சார்பில் தயார் செய்யப்பட்டு போக்குவரத்து போலீசாருக்கு வழங்கப்படும்.

    புத்தன் அணை குடிநீர் திட்ட பணிகள் நடந்து வருகிறது. தற்பொழுது வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்க நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம். முதல் கட்டமாக 40 ஆயிரம் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு கொடுத்ததற்காக மீட்டர் வந்துள்ளது. அதற்கான பணிகள் விரைவில் தொடங்கப்பட்டு முடிக்கப்படும். புத்தன் அணை குடிநீர் திட்டத்தை தெங்கம்புதூர் பகுதியில் செயல்படுத்த ரூ.35 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    அந்த பணிகள் விரைவில் தொடங்கப்படும். நாகர்கோவில் மாநகர பகுதியில் குடிநீர் பிரச்சி னையை சமாளிப்பதற்கு பல்வேறு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. புத்தன் அணையில் இருந்து பரிசோதனைக்கு வரக்கூடிய 22 மில்லியன் லிட்டர் தண்ணீரை கிருஷ்ணன் கோவில் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து பொது மக்களுக்கு சப்ளை செய்வது தொடர்பாக ஆலோசித்து வருகிறோம். அதை பொது மக்களுக்கு விநியோகம் செய்யும் பட்சத்தில் குடிநீர் பிரச்சனைக்கு தீர்வு காணப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அப்போது பொறியாளர் பாலசுப்பிரமணியன், நகர்நல அதிகாரி ராம் குமார் ஆகியோர் உடனிருந்தனர்.

    • 6 இடங்களில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்கப்படுகிறது
    • கிருஷ்ணன்கோவிலுக்கு பைப்லைன் அமைக்கப்பட்டு தண்ணீர் வெள்ளோட்டம்

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட மக்களுக்கு முக்கடல் அணையில் இருந்து குடிநீர் சப்ளை செய்யப்பட்டு வருகிறது. போதுமான அளவு தண்ணீர் இல்லாத தையடுத்து புதிய திட்டத்தை செயல்படுத்த மாநகராட்சி நடவடிக்கை மேற்கொண்டது.

    ரூ.299 கோடி செலவில் புத்தன் அணை குடிநீர் திட்ட பணிகள் தற்பொழுது முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. புத்தன் அணையில் இருந்து பைப் லைன் மூலமாக நாகர்கோவில் கிருஷ்ணன் கோவில் உள்ள சுத்திகரிப்பு நிலையத்திற்கு தண்ணீர் கொண்டு வரப்பட்டு பொதுமக்களுக்கு தண்ணீர் சப்ளை செய்யப்படுகிறது.

    தற்போது புத்தன் அணையில் இருந்து கிருஷ்ணன்கோவிலுக்கு பைப்லைன் அமைக்கப் பட்டு தண்ணீர் வெள்ளோட்டம் பணி நடந்தது. ஒரு சில இடங் கல் பைப்லைனில் நீர்க்க சிவு இருந்ததையடுத்து அதை சீரமைக்கும் பணி நடந்து வருகிறது.

    இந்த பணிகளை துரிதப்படுத்தும் வகையில் மேயர் மகேஷ், கிருஷ்ணன் கோவிலில் உள்ள சுத்திகரிப்பு நிலையத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    இதை தொடர்ந்து வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு கொடுக்க ரூ.16 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த பணிகளை 3 மாத காலத்திற்குள் முடிக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

    இந்த நிலையில் நாகர்கோவில் மாநகராட்சியுடன் தெங்கம்புதூர், ஆளூர் பேரூராட்சிகள் இணைக்கப்பட்டு உள்ளது. இந்த பகுதிகளுக்கும் புத்தன் அணை குடிநீர் திட்டத்தை வழங்க மாநகராட்சி மேயர் மகேஷ் மற்றும் அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள். முதல் கட்டமாக தெங்கம்புதூர் பகுதியில் புத்தன் அணை குடிநீர் திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    நாகர்கோவில் மாநகராட்சிக் குட்பட்ட 50, 51, 52-வது வார்டுக்குட்பட்ட பகுதிகளில் புத்தன் அணை குடிநீர் திட்டத்தை செயல்படுத்த ரூ.34கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த பணிகள் விரைவில் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    கிருஷ்ணன் கோவிலில் இருந்து தெங்கம்புதூருக்கு பைப் லைன் மூலமாக தண்ணீர் கொண்டு செல்லப்பட்டு தண்ணீர் வழங்க நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள். இதற்காக 6 இடங்களில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் கட்டவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    3 வார்டுக்குட்பட்ட 4000 வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்க நடவடிக்கை மேற்கொண்டு உள்ளனர். புத்தன் அணை குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படும் போது பொதுமக்களுக்கு தங்குதடையின்றி தினமும் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். தினமும் ஒரு நபருக்கு 135லிட்டர் தண்ணீர் வழங்க நடவ டிக்கை மேற் கொள்ளப்பட்டுள்ளது.

    • முக்கடல் அணை தூர்வாரப்படாததால் ஒவ்வொரு ஆண்டும் கோடையில் தண்ணீர் பற்றாக்குறை
    • ரூ.16 கோடி செலவில் வீடுகளுக்கு இணைப்பு கொடுக்கும் பணி நடைபெற்று வருகிறது.

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் மாநகர மக்களுக்கு முக்கடல் அணையில் இருந்து குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. ஆனால் முக்கடல் அணை தூர்வாரப்படாததால் ஒவ்வொரு ஆண்டும் கோடையில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டு வருகிறது.

    எனவே புதிய குடிநீர் திட்டமாக புத்தன் அணை குடிநீர் திட்டத்தை செயல் படுத்த மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டது. தற்போது புத்தன் அணை குடிநீர் திட்ட பணிகள் இறுதி கட்டத்தில் உள்ளன.

    இதுகுறித்து மாநகராட்சி மேயர் மகேஷ் நிருபர்களிடம் கூறியதாவது:-

    நாகர்கோவில் மாநகர மக்களுக்கு குடிநீர் பிரச்சினையை தீர்க்கும் வகையில் புத்தன் அணை குடிநீர் திட்டப்பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. 95 சதவீத பணி கள் நிறைவடைந்துள்ளன. புத்தன் அணையில் இருந்து கிருஷ்ணன் கோவிலில் உள்ள குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு தண்ணீர் கொண்டுவரப்பட்டது. அப்போது 47 இடங்களில் நீர் கசிவு ஏற்பட்டது. அதை சரி செய்துவிட்டோம். புத்தன் அணை தண்ணீரை வீடுகளுக்கு வழங்க நாகர்கோ விலில் 11 இடங்களில் புதிதாக மேல்நிலை குடிநீர் தொட்டி கள் கட்டப்பட்டுள்ளன. ஏற்கனவே 10 இடங்களில் குடிநீர் தொட்டிகள் உள் ளன.

    இந்த நிலையில் புத்தன் அணையில் இருந்து 21 குடிநீர் தொட்டிகளிலும் தண்ணீர் ஏற்றுவதற்கான நடவடிக்கைகள் விரைவில் மேற்கொள்ளப்படும்.

    மேலும் ரூ.16 கோடி செலவில் வீடுகளுக்கு இணைப்பு கொடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் அனைத்தும் நிறைவடைந்து பொதுமக்க ளுக்கு தண்ணீர் கொடுக்கும் பட்சத்தில் நாகர்கோவில் மாநகர மக்களுக்கு குடிநீர் பிரச்சினை ஏற்படாது. தினமும் ஒருவருக்கு 125 லிட்டர் கொள்ளளவு கொண்ட தண்ணீர் வழங்கப் படும். நாகர்கோவில் மாநக ராட்சியை தன்னிறைவு பெற்ற மாநகராட்சியாக மாற்ற அனைத்து நடவ டிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது.

    வளர்ச்சி பணிகள், சுகாதார பணிகள் அனைத் திற்கும் முன்னுரிமை அளித்து திட்டங்கள் தீட்டப்பட்டு வருகிறது. ஏற்கனவே சாலைகளை மேம்படுத்த ரூ.40 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு அதற்கான பணிகள் நடந்தன. தற்போது மேலும் ரூ.25 கோடி செலவில் சாலைகள் சீரமைக்கப்படு கிறது.

    மாநகர பகுதியில் உள்ள தெருவிளக்குகளை எல்.இ.டி. விளக்குகளாக மாற்ற நடவடிக்கை எடுக்கப் பட்டு வருகிறது. ரூ.14 கோடி செலவில் டெண்டர் போடப்பட்டு அதற்கான பணிகள் விரைவில் மேற்கொள்ளப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    முன்னதாக குளச்சல் தொகுதிக்குட்பட்ட மாற்றுக்கட்சியை சேர்ந்த நிர்வாகி மணிமாறன் தலைமையில் மாநகராட்சி மேயர் மகேஷ் முன்னிலை யில் தி.மு.க.வில் இணைந்தனர். அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி மேயர் மகேஷ் வரவேற்றார்.

    • அதிகாரிகளுடன் மேயர் மகேஷ் ஆலோசனை
    • நாகர்கோவில் மாநகரின் பிரதான இரு பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும்

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் மாநகராட்சியில் அம்ரூத் திட்டத்தின் கீழ் ரூ.251 கோடி மதிப்பீட்டில் புத்தன் அணை குடிநீர் திட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. புத்தன் அணையில் இருந்து நாகர்கோவில் வரை குழாய்கள் அமைத்த நிலையில் நாகர்கோவில் மாநகரில் புதிதாக வீட்டுக்குள்ள இணைப்புகள் வழங்கப்பட்டு வருகின்றது. இதே போல் பாதாள சாக்கடை திட்ட பணிகளும் முடிவடையும் தருவாயில் உள்ளது. இந்த பணிகள் மக்கள் பயன்பாட்டிற்கு விரைந்து கொண்டு வரும் வகையில் மேயர் மகேஷ் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்.

    இந்த பணிகளை விரைந்து முடிப்பது குறித்து நாகர்கோவில் மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் மகேஷ் தலைமையில் குடிநீர் திட்ட அதிகாரிகள் மற்றும் பாதாள சாக்கடை திட்ட பொறியாளர்கள் உடன் ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்தில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய தலைமை பொறியாளர் ரகுபதி, கண்காணிப்பு பொறியளார் மைக்கேல் சேவியர், செந்தூர் பாண்டியன் மற்றும் செயற்பொறியாளர் கோபாலகிருஷ்ணன் ஆகியோர் கலந்துகொண்ட னர்.

    கூட்டத்திற்கு பின்னர் மேயர் மகேஷ் கூறியதாவது:-

    புத்தன் அணை குடிநீர் திட்ட பணிகள் 95 சதவீதம் முடிவடைந்துள்ளது. ஏற்கனவே நான் அந்த பணிகளை நேரில் சென்று பார்வையிட்டேன். வருகிற மே 31-ந்தேதிக்குள் புத்தன் அணை தண்ணீரை நாகர்கோவில் கொண்டு வருவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் முடுக்கி விடப்பட்டுள்ளது. ஜூன் மாதம் முதல் புத்தன் அணை தண்ணீர் நாகர்கோவில் மாநகரில் ஏற்கனவே பொருத்தப் பட்டுள்ள இணைப்புகள் மூலம் வழங்கப்படும். தொடர்ந்து அனைத்து வீடுகளுக்கும் புதிய இணைப்புகள் மூலம் குடிநீரை வழங்கு வதற்காக தலா ரூ.8.30 கோடி மதிப்பீட்டில் இரண்டு பகுதிகளாக மொத்தம் ரூ.16.60 கோடியில் ஒப்பந்தம் விடப்பட்டுள்ளது. ஒரு சில மாதங்களுக்குள் தற்போது வீட்டு வாசல் அருகே இருக்கும் இணைப்பில் இருந்து முறைப்படி வீட்டுக்குள் குடிநீர் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    பாதள சாக்கடை திட்ட பணிகளை பொறுத்தவரை வலம்புரிவிளை கிடங்கில் இருந்து சுத்திகரிக்கப்பட்ட நீரை வெளியேற்றுவதற்கான பணிகள் தொடங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. விரைவில் இந்த பணிகள் தொடங்கி ஒரு சில மாதங்களுக்குள் சுத்திகரிக்கப்பட்ட நீர் வெளியேற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இதன் மூலம் நாகர்கோவில் மாநகரின் பிரதான இரு பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். இதற்காக அனைத்து நடவடிக்கைகளையும் சம்பந்தப்பட்ட துறை பொறியாளர்கள் மூலம் மேற்கொள்ளப் பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • குமரி மாவட்டத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட அங்கன்வாடிகள் உள்ளது.இந்த மையங்களில் பல அங்கன்வாடிகள் சேதமடைந்து காணப்படுகிறது
    • கடலோரப் பகுதியில் உள்ள சாலையின் அடியில் குடிநீர் திட்டத்திற்காக பைப் லைன்கள் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த பைப் லைனில் உடைப்பு ஏற்பட்டு அடிக்கடி தண்ணீர் வெளியேறி வருகிறது

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் இன்று நடந்தது.விஜய் வசந்த் எம்.பி. தலைமை தாங்கினார்.கலெக்டர் அரவிந்த் முன்னிலை வகித்தார்.

    கூட்டத்தில் எம்.எல்.ஏ.க்கள் தளவாய் சுந்தரம், பிரின்ஸ், ராஜேஷ் குமார், மேயர் மகேஷ் மாவட்ட பஞ்சாயத்து தலைவர் மெர்லியன்ட் தாஸ், மாநகராட்சி ஆணையர் ஆனந்தமோகன் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் உட்பட அனைத்து துறை அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் தளவாய் சுந்தரம் எம்.எல்.ஏ. பேசுகை யில், குமரி மாவட்டத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட அங்கன்வாடிகள் உள்ளது.இந்த மையங்களில் பல அங்கன்வாடிகள் சேத மடைந்து காணப்படுகிறது. இருக்கைகள், மின்விளக்கு வசதி இல்லாமல் உள்ளது. அதை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    புத்தன்அணை குடிநீர் திட்டத்திற்காக இறச்சகுளம் சாலை தோண்டப்பட்டு பல நாட்கள் ஆகிறது. அந்த சாலை சீரமைக்கப்படவில்லை. நாகர்கோவில் நகர மக்க ளுக்கு 7 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. புத்தன்அணை குடிநீர் திட்ட பணிகள் டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணியை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

    ராஜேஷ் குமார் எம்.எல்.ஏ. பேசுகையில் குமரி மாவட்டத்தில் அங்கன்வாடி கட்டிடங்கள் வாடகை கட்டிடத்தில் செயல்பட்டு வருகிறது. வாடகை கட்டிடத்தில் செயல்படும் அங்கன்வாடி கட்டிடங்களை மாற்றிவிட்டு நிரந்தர கட்டிடம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    தற்பொழுது சேதம் அடைந்த பள்ளிகள் இடித்து அகற்றப்பட்டு வருகின்றன. மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பள்ளிக் கூடங்கள் சேதம டைந்து பராமரிப்பின்றி உள்ளது.அவற்றை பரா மரிக்க போதுமான நிதி ஒதுக்க வேண்டும்.

    கடலோரப் பகுதியில் உள்ள சாலையின் அடியில் குடிநீர் திட்டத்திற்காக பைப் லைன்கள் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த பைப் லைனில் உடைப்பு ஏற்பட்டு அடிக்கடி தண்ணீர் வெளியேறி வருகிறது. இத னால் விபத்துகள் நடந்து வருகிறது.

    எனவே சாலையின் நடுவே போடப்பட்டுள்ள சிமெண்ட் பைப்புகளை அகற்றி விட்டு இரும்பு பைப்புகள் அமைக்க நட வடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

    பிரின்ஸ் எம்.எல்.ஏ. கூறுகையில், இரணியல் கூட்டு குடிநீர் திட்ட பணிகள் எந்த ஆண்டு முடிவடையும். ஏற்கனவே கடந்த கூட்டத்தில் பணிகள் விரைவில் முடிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

    ஆனால் தற்பொழுது வரை பணிகள் இன்னும் முடிக்கப்படவில்லை. இந்த குடிநீர் திட்டப் பணிக்காக தோண்டப்பட்ட பரசேரி- இரணியல் சாலையும் மோசமாக உள்ளது. கட்டிமாங்கோடு நொட்டாங்கோடு பகுதி மக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட வில்லை என்றார்.

    இதற்கு பதிலளித்து கலெக்டர் அரவிந்த் பேசு கையில், குமரி மாவட்டத்தில் பள்ளிக்கட்டிடங்களை பராமரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.பழுதடைந்த பள்ளி கட்டிடங்கள் இடித்து அகற்றப்பட்டுள்ளது.

    மேலும் சேதமடைந்த பள்ளி கட்டிடங்கள் குறித்து கணக்கெடுக்கப்பட்டு அதை சீரமைக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளோம்.பள்ளி கட்டிடங்களை பராமரிப்பதற்கு அனைத்து துறைகளின் சார்பிலும் நிதி ஒதுக்கப்பட்டு புதிய கட்டிடங்கள் கட்டவும் நடவடிக்கை மேற்கொண்டு உள்ளோம்.

    புத்தன் அணை குடிநீர் திட்ட பணிகள் 90 சதவீதம் நிறைவடைந்து உள்ளது. இந்த பணியை டிசம்பர் மாதத்திற்குள் முடிக்க திட்டமிட்டு உள்ளோம்.அதற்கான பணிகள் அனைத்தும் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

    புத்தன்அணை குடிநீர் திட்ட பணிகள் முடிக்கப்படும் போது பொதுமக்களுக்கு தங்கு தடையின்றி குடிநீர் கிடைக்கும்.

    கடற்கரை சாலையில் குடிநீர் திட்டத்திற்காக அமைக்கப்பட்டு உள்ள சிமெண்ட் பைப்புகளை அகற்றிவிட்டு இரும்பு பைப்புகள் அமைப்பதற்கு 8 கிலோ மீட்டர் தூரத்திற்குதிட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு உள்ளது என்றார்.

    • நாகர்கோவில் நகர மக்களுக்கு முக்கடல் அணையில் இருந்து தண்ணீர் சப்ளை செய்யப்பட்டு வருகிறது.
    • அம்ருத் திட்டத்தின் மூலம் ரூ 250 கோடி செலவில் புத்தன் அணை குடிநீர் திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் நகர மக்களுக்கு முக்கடல் அணை யில் இருந்து தண்ணீர் சப்ளை செய்யப்பட்டு வருகிறது. நாகர்கோவில் அருகில் உள்ள மக்கள் தொகைக்கு ஏற்ப அணையில் போது மான அளவு தண்ணீர் இல்லாததால் புதிய திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    அம்ருத் திட்டத்தின் மூலம் ரூ 250 கோடி செலவில் புத்தன் அணை குடிநீர் திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டது. புத்தன்அணையில் இருந்து பைப் லைன் மூலமாக நாகர்கோவில் கிருஷ்ணன் கோவிலில் உள்ள சுத்திகரிப்பு நிலையத்திற்கு தண்ணீர் கொண்டுவரப்பட்டு பொதுமக்களுக்கு தங்கு தடை இன்றி தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    தற்போது இந்த பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது. கிருஷ்ணன்கோவில் சுத்திகரிப்பு நிலையத்தில் நடைபெற்று வரும் பணிகளை நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் ஆணையாளர் ஆனந்த மோகன் ஆகியோர் இன்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    அங்கு மேற்கொள்ள ப்பட்டுவரும் சுத்திகரிப்பு நிலையம் கட்டுமானப் பணி குடிநீர் தொட்டி கட்டுமானப் பணி மற்றும் அனைத்து பணிகளையும் பார்வையிட்டு அந்த பணிகளை துரிதமாக முடிக்க அறிவுறுத்தினார்கள்.

    இதனைத் தொடர்ந்து மேயர் மகேஷ் நிருபர்களிடம் கூறியதாவது:

    நாகர்கோவில் நகர மக்களுக்கு தங்கு தடையின்றி குடிநீர் வழங்க அம்ருத் திட்டத்தின் கீழ் ரூ 250 கோடி செலவில் புதிய திட்டம் தொடங்கப்பட்டது. தற்பொழுது இந்த திட்டத்திற்கு மேலும்ரூ 45 கோடி நிதி ஒதுக்கப்பட்டுரூ 296 கோடி செலவில் பணிகள் நடைபெற்று வருகிறது.

    இன்னும் இரண்டு மாத காலத்திற்குள் இந்த பணிகள் முடிக்கப்பட்டு பொது மக்களுக்கு தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.இந்த திட்டம் செயல்படுத்தப்படும் போது பொது மக்களுக்கு தினமும் குடிநீர் வழங்கப்படும்.

    எனவே இந்த பணியை துரிதமாக முடிக்க அறிவுறுத்தி உள்ளோம்.விரைவில் பணிகள் முடிக்கப்பட்டு நாகர்கோவில் நகர மக்க ளுக்கு தங்கு தடையின்றி குடிநீர் வழங்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார். அழிவின்போது மண்டல தலைவர் ஜவஹர் திமுக மாணவரணி அமைப்பாளர் சதாசிவம் மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.

    ×